எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Thursday, March 4, 2010

நான் அன்பு தொலைத்தவன்


மணிக்கணக்கில்
நான் பேசிய
வார்த்தைகளை
மவுனத்தில்
கரைத்திட்ட
கணப் பொழுதுகள்.

மேடு பள்ளங்களை
எதிர்பார்த்த-உன்
இதழால் மட்டுமே
நிரப்ப முடிந்த

பள்ளங்கள் ஏற்படுத்திய
உன்
இருசக்கர வாகனப்
பயண உரசல்.

உன் இதழ்
வெப்பம்
கைப் பேசியின்
வழியே என்
செவி உணர்ந்த
மணிப் பொழுதுகள்.

இருவருமே
கல்லூரி தவிர்த்து
காதல் பழகிய
அந்த நாட்கள்.

அந்த
ஒரு இரவில்
நம் அன்பின்
தேடலுக்கு பின்
என் வேற்று மார்பில்
கலைந்த
கூந்தலோடு-உன்
இதழ் தொடுத்த
கோலத்தில் வழிந்த
எச்சில்
பிசுபிசுப்பு.

தூக்கமில்லாத
கண்களோடு
அடுத்த நாள்
கல்லூரியின்
உணவு இடைவேளையில்
அன்போழுகிய அந்த
அசதிப் புன்னகை.

ஏதோ
ஒரு மாலைப்பொழுதில்
உன் தகப்பனோடு
என் வீட்டு
வரவேற்ப்பறையில்-நீ
கொடுத்த
என் தந்தையின்
வருகையை எதிர்பார்க்கும்
உன் திருமண அழைப்பிதல்.

4 comments:

  1. மச்சவல்லவன்]March 6, 2010 at 9:25 PM

    மிகவும்சிறப்பு தோழரே....

    ReplyDelete
  2. nadri thozhar ungalathu parattukkal yenakku innum ukkamutubavai

    ReplyDelete
  3. oru ilaya kavikku ivvalavu paarattukkal varum yendru naan yithir paarthathillai thozhar nandrigal pala

    ReplyDelete