விழிக் குளம்
தளும்ப
விதி நொந்த
நங்கள் - பணமுடி
கொடுத்த - படகு
பாதியில்
இறக்கி விட
கடற்படை கைது செய்து
கரைசேர்ந்தபோது
கையிருப்பு சில்லறைகளையும்
அலுவலர் கூட்டம்
பறித்து கொண்டு - எமை
முகாம் நோக்கி
இட்டு சென்றபோது -எம்மை
கடந்துசென்றது
ஈழத் தமிழர் மறுவாழ்வு பேரணி ???
No comments:
Post a Comment