எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Thursday, March 4, 2010

புரிதலை ஏற்படுத்த வேண்டிய தருணம்(கட்டுரை)


சுவாமி என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த நித்யானந்தாவின் படுக்கையறை காட்சிகளை தமிழக அரசின் ஆதரவுத் தொலைகாட்சி ஒவ்வொரு தமிழனின் வீட்டு கூடத்திலும் ஒளிபரப்புசெய்து மீண்டும் ஒரு முறை தனது ஏற்றப்புள்ளிகளை உயர்த்த முயற்சி செய்துள்ளது. 33 வயதே நிரம்பிய ஓர் இளைஞனை இதுவரை கடவுளின் கேட் பாசுடன் வந்த ஓர் தூதுவனாக நினைத்த இந்து மக்கள் கட்சி போன்ற காவிவேடதாரிகள் தற்போது சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு நித்யானந்தாவின் சொத்துக்களை நாசப்படுத முயற்சித்திருக்கிறார்கள். ஒருவேளை அந்த காவிவேடதாரிகளுக்கு நடிகையை நித்யானந்தா தொடர்புகொள்ள வசதி ஏற்படுத்தித் தந்திருந்தால் இந்த கலயோபரங்கள் நடந்திருக்காது. முதலில் சாமியார்களை ஒழுக்க சீலர்கள் என்று கருதுவதும்,ஒரு மானிடன் தனது எல்லாஉணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்ற அவனது சுயம் சார்ந்த முடிவினை ஒருசமுகம் முடிவெடுப்பது சரியா என்பது முதல் கேள்வி. எந்த ஒரு சாமியாருக்கும்,பாதிரியார்க்கும்,ஊலாமாக்களுக்கும்,கன்னிகாஸ்திரிகளுக்கும் விந்தணு வெளிப்பாடோ,மாதவிடாய் காலங்களோ எர்ப்படாமலிருக்கும் என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒரு ஆண் தனது கலவிப் பொழுதுகளில் விந்து வெளிப்பாட்டின் போது உச்சம் அடைகிறான் என்பது நிதர்சனம்.அதே நிதர்சனம் ஒரு சாமியாருக்கும் குறைந்த கால இடைவேளிகலான சுமார் ஒன்றரை மாதங்களுக்கு ஒருமுறையாவது நிகழ்வது இயல்பு.அப்படி இருக்க அவரை ப்ரம்ச்சர்யத்தை கடைபிடிக்க வேண்டும் என கட்டாயப் படுத்துவது தவறு.அது அவரின் சுய சிந்தனைக்கு உட்பட்ட முடிவு. மேலும் அந்த நடிகையின் முழு சம்மததினுடனே அவர் உறவு கொள்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.ஒரு பெண் அவளது விருப்பமான ஆணின் அவனது சம்மதம் இருக்கும் பட்சத்தில் அவனுடன் உறவு கொள்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.இப்போது வீதிக்கு வந்து போராடும் பண்பாடு காப்பாளர்கள் அந்த நடிகை நடித்த குளியல் காட்சிகளையோ, குத்து பாட்டுக்களையோ பார்த்திருக்க மாட்டார்கள் என அந்த இயக்கம் சார்ந்த தலைவர்கள் விளக்கம் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள். மேலும் பெரும்பான்மை மக்கள் மதிக்கும் இடங்களான இதற்க்கு முன்னாள் நிகழ்ந்த கருவறை கலவி போன்று கருவறை தளங்களை பயன்படுத்தாமல் தனியறையில் உறவுகொண்டமைக்காக நித்யானந்தா பாராட்டப்பட வேண்டியவராகிறார். இதில் தவறு நமது சமூகத்தையே சார்ந்தது,கடவுளின் பிரதிநிதி என்று நம்மில் இருந்தே ஒருவன் கூறும்போது அதனைஏற்று அவனை வழிபடத் தொடங்கியபிறகு,சக மனிதர்களுக்கு தோன்றும் உணர்சிகளை அவன் வெளிக் கொணரும்போது சமுக மனிதர்களின் மனம் அதனை ஏற்க மறுக்கிறது, இதில் கண்டிக்கப்படவேண்டியவர்கள் ஊடகத்தார். எத்தனையோ சமுகம் சார்ந்த பிரச்சனைகள் இருக்க சாமியார் அவரது அறையில் பஜனை செய்கிறாரா அல்லது மாத்திரை விழுங்கி காலித்தனம் செய்கிறாரா என வேவு பார்க்கும் திறமையை பிறசமுகம் சார்ந்த நிகழ்வுகளில் காட்டலாம். நமது மக்களுக்கு கடவுள் உண்டா,அவ்வாறு இருந்தால் அந்த நபருக்கு ஏஜெண்டுகள் உண்ட என்ற புரிதலை ஏற்ப்படுத்த வேண்டிய கட்டாயத்தை இந்த நிகழ்வு நமக்கெல்லாம் எடுத்து இயம்புகிறதே ஒழிய வேறு எந்த ஒரு பேரழிவும் இந்த நிகழ்வால் ஏற்படப்போவதில்லை. பெரியார்,மார்க்ஸ்போன்ற தலைவர்கள் சொன்ன கருத்துக்களை மக்களிடம் சொல்லி புரிதலை ஏற்படுத்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்ததர்க்க்காகவும் நித்யனந்தாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிரிக்கிறோம்.இது புரிதலை ஏற்படுத்த வேண்டிய தருணம்.

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment