நான் கள்ளிகளின் காதலன்
நான்
கடந்து செல்லும்
பாதைகளில்
கற்பூர முல்லைகளே
இருந்தாலும்
கள்ளிகளுக்காய்
மட்டுமே அனுமாநிக்கப்பட்டவன்
நான்.
எனக்காக
எப்போதோ
எங்கேயோ
ஏதோ
ஓர் தேவதை
வீசி எறிந்த
மலர் கூட
எனை வந்து
தொடுகையில்
சருகாகவே எனை
ஸ்பரிசித்தது.
அப்போதுதான்
உணர்ந்தேன்
நான்
"கள்ளிகளின் காதலன்"
என்று."
No comments:
Post a Comment