எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Tuesday, March 2, 2010

காதலே எழுந்துவா கல்லறை வாசம் போதும்


ஏனடி
இதழ்களுக்கிடையே
சுவர் எழுப்புகிறாய்?

இன்னுமொரு
உத்தபுரம்
தேவையா?

செம்படை
வரும்முன்
சுவர் நீக்கு.

வா
ஓர்எச்சில்
இலக்கியம்
எழுதுவோம்
நாம்!


உச்சத்திலும் ஏனடி
மிச்சம்
வைக்கிறாய்?

முன்னொருமுறை
இருள்
கவிழ்ந்த
கலவிப்
பொழுதுகளில் நீ
வரைந்த நகக்கிறல்
ஓவியம்
தழும்புகளாய்.

அதனைப்புதுப்பிக்கப்
புதுப் பட்டறை
அமைப்போம்
சட்டென வா!


அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment