எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே
Friday, March 12, 2010
ஓர் ஈழத் தாயின் வழியனுப்பல்
கலைந்திடு
என் குழந்தாய்
கருவில் இருந்து
கலைந்திடு என்
குழந்தாய்.
வன்னியில்
சிங்களவனால்
புனரப்பட்ட உன்
பெரியக்காள்
சொல்லிவிட்டாள்
"இனியொரு பெண்
பிறந்தால் அது
ஈழத்திலே
இருக்க வேண்டுமென்றே"
அன்றே.
உன்
பாலினம் நானறியேன்
ஆயினும்-நீ
கலைந்திடு செல்லமே.
பெண்ணாய்
நீ பிறந்தால்
கலவரத்தில் புணரப்படுவாய்.
ஆணாய்
பிறந்துவிட்டால்
புலியா என்று சோதிக்க
நிர்வாண
உடை அணிவாய்.
கம்பிகளுக்குள்
அடைபட்டே
காலம் கழியனுமா?
வேண்டாமேன்
தங்கமே-கலைந்திடு
நீயேன்
கருவிலே.
நமது
ஈனம் அழித்திட
தலைவனிருந்தான்.
அவன்
ஈழத்தாகம்
அழித்திட
கொத்தளமிட்டார்.
தமிழச்சிகள்
மானம் காற்றில்
பறக்க-உயிரில்லா
கண்ணகி சிலை
காட்டி தேர்தல்
முழக்கமிட்டார்.
ஷெல் அடித்து
ஷெல் அடித்தே
நம் இனம்
செல்லரித்துப்
போனதடா.
ஈழம் கிடைப்பது
பிறகேனினும்-நம்
ஈனம் துடைத்திட
யாருமில்லை
இப்போது-ஆதலால்
கலைந்திடேன்
கருவிலே-என்
முகமறியா
ஆம்பலே.
சுரக்குமென்
தாய்பாலை-என்
இறப்புக்குப் பிறகு
உனக்களிப்பேன்-அதுவரை
நீயேன்
கருவிலிருந்து
அழிந்துப்
பொறுத்திருப்பாய்.
போ என் தங்கமே.
நானும் வருவேன் பின்னமே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment