எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Friday, March 5, 2010

பிரிவாற்றாமை


நீ
பிஞ்சு மொழி
மஞ்சள்
கிள்ளை.

சிறகுகளை
சிதறவிட்ட
சுடிதார்
தேவதை.

ஊடல்.
கூடல்
கூட்டும்.

சிரபுஞ்சியில்
நின்று கொண்டே
சகாரா
உஷ்ணம்
உணர்த்தும் உன்
பிரிவாற்றாமை.

நகம் வெட்ட
மட்டுமே
கத்தியெடுக்கும் நான்
இப்போதேல்லாம்
நெஞ்சு கிழித்து
காட்டலாமா உன்னிடம்
என்றோசிக்கும்
அனுமனாகிவிட்டேன்.

நீ
பேசாத நாட்களில்
காற்று குடிக்கும்
தாவரமாகிப்
போனேன் நான்.

பிற
உயிரினங்கள்
சுவாசிப்பிற்க்காய்
ஆக்சிஜன்
மிச்சம் வைக்கச்சொல்லி
அழுகின்றன
என்னிடம்.

கேட்கவில்லையா
உனக்கு?

கூவி விடு
குயிலே-என்
அழைபேசி-உன்
அழைப்பிற்காய்
ஏங்கி நிற்கிறது.

No comments:

Post a Comment