எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Tuesday, June 29, 2010

என் புறநானுற்றுத் தாய் மீண்டும் பிறப்பெடுக்கிறாள்



பச்சைக்கறி தின்ற
எச்சில் கை காயாமல்
வரம் தந்த
அரசனுக்கு கைகுலுக்க
எங்கள் கரை வந்த
காட்டேறி.

முதலை குழுமத்தின்
முதன்மை உறுப்பினர்
கண்ணீரோடு கரையேறி
அசுரமடியில் அமர்ந்திருந்த
காட்டேறியின் காலிடுக்கில் நின்று
நரமாமிசம் தின்பதை
நிறுத்திவிடன்றேது.

காட்டேறியின்
"இனி நான் பல்குத்தப் போவதில்லை"
என்ற உறுதிமொழியை-தன்
வெற்றிச் சிகரமாக்கி-பிரிதொருநாளில்
கிழ முதலைக்கு கிரிடம்
சூட்டப்பட்டது.

அதோ என்
முலையறுந்த தங்கையொருத்தி
கந்தகம் நிரப்பப்பட்ட
யோனிக் குழிகளுடன்
வருகிறாள்.

முதலைக் கூடாரமாகட்டும்
அசுரர்களாகட்டும்,காட்டேரிகளாகட்டும்
இனி யம்மை யார்
புணர்ந்தாலும் சிதறடிப்போம்
மறுபுணர்தல் இன்றியேன்று.

என் புறநானுற்றுத் தாய்
மீண்டும் பிறப்பெடுக்கிறாள்
கோடானகோடியாய்.

Thursday, June 24, 2010

தீயா


என் விழிப்
பாவைக்குள்
நிறைந்த
பாவையவள்-நட்புக்
"கோ" வையவள்.

புரிதல் இல்லாப்
பேதையவள்.

பிறழ் மனம்கொண்ட
பெதும்பையவள்.

அன்பிலாய்
கோபத்தில் ஆந்தையாய்
எரிக்கும் அக்னியாய்.

அன்னையாய்
அனைத்தவள்.
அணையாய்
தடுத்தவள்.

மைகாய்ந்த
என் எழுதுகோலில்
அன்பு நிரப்பி எனக்கு
எழுதக் கொடுத்தவள்-என்
கை பிடித்து மீட்டு
கவிதை தேசத்திற்கு
மிண்டும்
அழைத்துவந்தவள்.

மெய்யானவள்
என்னில்
மெய் ஆனவள்.

வீதிகள்
புதைந்தஎன்
தேசத்தின் விடியலுக்காய்
விளக்கு கொடுத்தவள்.

செய்யாத
தவறுக்காய்எனக்கு
விலக்கு கொடுத்தவள்.

என்னிடத்தில்
உள்ள உனக்கான
பாத்திரமும்.

நமக்குள்
நீ ஏற்படுத்திய
இட்டுநிரப்பமுடியாத
இடைவெளியும்
வெற்றிடமாகவே
காத்திருக்கும்.

கழிவறைத் தாய்கள்


துளைமாற்றி
பிதுக்கி எறியப்படும்
மலமாய் சிசு.

உபயோகம்
முடிந்து உருவிஎறியப்படும்
ஆணுறையாய் தாய்மை.

கழிவறைகளில்
வழித்தேறியப்படும்
மாதவிடாய் கழிவுகளாய்
மனிதநேய மாண்புகள்.

புதுமை
புரட்சி
பெண்ணியம்
தேசியம்
புண்ணாக்கு.

பாரதி
மீண்டெழுந்து வந்து
இப் புண் ஆற்று.