எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Tuesday, June 29, 2010

என் புறநானுற்றுத் தாய் மீண்டும் பிறப்பெடுக்கிறாள்



பச்சைக்கறி தின்ற
எச்சில் கை காயாமல்
வரம் தந்த
அரசனுக்கு கைகுலுக்க
எங்கள் கரை வந்த
காட்டேறி.

முதலை குழுமத்தின்
முதன்மை உறுப்பினர்
கண்ணீரோடு கரையேறி
அசுரமடியில் அமர்ந்திருந்த
காட்டேறியின் காலிடுக்கில் நின்று
நரமாமிசம் தின்பதை
நிறுத்திவிடன்றேது.

காட்டேறியின்
"இனி நான் பல்குத்தப் போவதில்லை"
என்ற உறுதிமொழியை-தன்
வெற்றிச் சிகரமாக்கி-பிரிதொருநாளில்
கிழ முதலைக்கு கிரிடம்
சூட்டப்பட்டது.

அதோ என்
முலையறுந்த தங்கையொருத்தி
கந்தகம் நிரப்பப்பட்ட
யோனிக் குழிகளுடன்
வருகிறாள்.

முதலைக் கூடாரமாகட்டும்
அசுரர்களாகட்டும்,காட்டேரிகளாகட்டும்
இனி யம்மை யார்
புணர்ந்தாலும் சிதறடிப்போம்
மறுபுணர்தல் இன்றியேன்று.

என் புறநானுற்றுத் தாய்
மீண்டும் பிறப்பெடுக்கிறாள்
கோடானகோடியாய்.

No comments:

Post a Comment