இபோழுதெல்லாம்
எப்பொழுதும் நினைப்பதில்லை
உன்னை.
உனை
எப்பொழுதும் நினைத்த
பொழுதும்.
எப்பொழுதாவது நினைக்கும்
பொழுதும் எற்படும்
உயிர்வலியை சொல்ல
இப்பொழுதும் வார்த்தைகளில்லை
என் மொழியில்.
உனக்கான கனவுகள்
சுமந்த என் கண்கள் இப்பொழுது
கானல் நீர்ப்பிரதேசமாய்
மாறிவிட்டது .
உனக்காக
நான் உண்டாக்கிய
காதல் தேசத்தை
கல்லறைகளால் நிரப்பிவிட்டு
கண்ணுக்கெட்டாத தூரத்தில்
நீ இருக்கிறாய்.
என் ராஜவீதியின்
வைரகீரிடம் உன்
முடிசுட்டலுக்காக
காத்திருக்கிறது!!
எனக்குத் தெரியும்
இப்பொழுதுகூட இந்த
மின்அஞ்சலுக்கு
பதிலனுப்பப்போவதில்லை என்பது
எனக்குத் தெரியும்- இருந்தாலென்ன
என் காதல்
பதில் எதிர்பாராதது...............
No comments:
Post a Comment