எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Saturday, March 10, 2012

அன்புள்ள காதலுக்கு,

அன்புள்ள காதலுக்கு,
நான் எத்தனை
முறை எழுதினாலும் - நீ
பதில் அனுப்பப் போவதுமில்லை,
நீ
பதில் தராமல்
போனாலும் நான்
எழுதுவதை நிறுத்தப்போவதுமில்லை.

இறந்துபோன - தன்
மனைவிக்கு எழுப்பிய
தாஜ்மஹாலை விட - எனை
மறக்க முயற்சிக்கும் - என்னவளுக்கு
எழுதும் இக் கடிதம் மகத்தானது.

இயேசு முன்று நாட்களுக்கு
பிறகு உயர்த்தேழுந்தார்
என்பது வரலாறு.
நான் உன்னோடு
பேசிய ஒரு வாரகாலத்தில் - நான்
ஓராயிரம் முறை
உயிர்த்தேழுந்திருக்கிறேன்!!!

எனை மனித நிலையிலிருந்து
யோக நிலைக்கு
மாற்றியவள் நீ!

நீ பேசிய
ஒவ்வோர் வார்த்தைகளும்
என் இதயச் சுவரில்
ஈரம் மாறாமல்
பிசுபிசுத்துக்கொண்டிருக்கிறது.

நீ
ஏற்படுத்திய காதல்
வேள்வியில் - நான்
மெழுகுப் பந்தமாய்
உருகிக்கொண்டிருக்கிறேன்.
உணர்வற்று ஓர்
ஓரமாய் இருந்து - நீ
வேடிக்கை பார்க்கிறாய்.

இப்பொழுது கூட
நீ மறுக்க
வாய்ப்பிருக்கிறது .
மறுக்கப்பட்ட
காதலும்.
மறைக்கப்பட்ட
காதலும்
மறித்த காதலாகாது.

காலம் தாழ்த்தி
எடுக்கப்படும் முடிவுகள்
தற்கொலைக்கு சமம்.
இது ரஷ்யப் பழமொழி.

உனக்காக நான்
சூழ்நிலைகளை தள்ளிப்போட
முடியுமே தவிர
தட்டிக்கழிக்க முடியாது.

காத்திருக்கிறேன்
காதலே.
காலம் தாழ்த்தாதே.

கடிகார முட்கள்
வாழ்கையை புரட்டிப்போடும்
வல்லமயுடையது.

கரம் கொடு
கைப்பற்றி அழைத்துப்போக
நான் தயார்.

நமக்கான
பூங்காவனம்
இன்னமும் பசுமை மாறாமல்
காத்திருக்கிறது.

No comments:

Post a Comment