என்
வாசல்வரை
வந்து போன
வசந்தம்
நீ!
என்
நுரையீரல்
தொலைத்துத் தேடும்
உயிர் சுவாசம்
நீ!
நான்
வார்த்தைகளால்
சொல்ல இயலா
வலி தந்தவள்
நீ!
எனை
கனவு தேசம்
கூட்டி வந்து என்
கண் பறித்தவள்
நீ!
மீண்டும்
மீண்டும் - கரை தழுவும்
அலையாய்
காதல் வேண்டி
காதல் வேண்டி - உனை
யாசிக்கிறேன்.
கரையாத
கரையாய் - நீனும்
யோசிக்கிறாய்.
இதுவரையில் யாரிடமும்
நான் கெஞ்சியதில்லை - ஏதேனும்
பொருள் கேட்டு
மன்றாடியதில்லை,
உன்னிடத்தில்
மட்டும் ஏனோ
வேறுபடுகிறேன்.
என்
உள்ளத்து அன்பு ஏனோ
உனக்குப் புரிவதுமில்லை!
வாசல்வரை
வந்து போன
வசந்தம்
நீ!
என்
நுரையீரல்
தொலைத்துத் தேடும்
உயிர் சுவாசம்
நீ!
நான்
வார்த்தைகளால்
சொல்ல இயலா
வலி தந்தவள்
நீ!
எனை
கனவு தேசம்
கூட்டி வந்து என்
கண் பறித்தவள்
நீ!
மீண்டும்
மீண்டும் - கரை தழுவும்
அலையாய்
காதல் வேண்டி
காதல் வேண்டி - உனை
யாசிக்கிறேன்.
கரையாத
கரையாய் - நீனும்
யோசிக்கிறாய்.
இதுவரையில் யாரிடமும்
நான் கெஞ்சியதில்லை - ஏதேனும்
பொருள் கேட்டு
மன்றாடியதில்லை,
உன்னிடத்தில்
மட்டும் ஏனோ
வேறுபடுகிறேன்.
என்
உள்ளத்து அன்பு ஏனோ
உனக்குப் புரிவதுமில்லை!
No comments:
Post a Comment