எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Thursday, June 24, 2010

தீயா


என் விழிப்
பாவைக்குள்
நிறைந்த
பாவையவள்-நட்புக்
"கோ" வையவள்.

புரிதல் இல்லாப்
பேதையவள்.

பிறழ் மனம்கொண்ட
பெதும்பையவள்.

அன்பிலாய்
கோபத்தில் ஆந்தையாய்
எரிக்கும் அக்னியாய்.

அன்னையாய்
அனைத்தவள்.
அணையாய்
தடுத்தவள்.

மைகாய்ந்த
என் எழுதுகோலில்
அன்பு நிரப்பி எனக்கு
எழுதக் கொடுத்தவள்-என்
கை பிடித்து மீட்டு
கவிதை தேசத்திற்கு
மிண்டும்
அழைத்துவந்தவள்.

மெய்யானவள்
என்னில்
மெய் ஆனவள்.

வீதிகள்
புதைந்தஎன்
தேசத்தின் விடியலுக்காய்
விளக்கு கொடுத்தவள்.

செய்யாத
தவறுக்காய்எனக்கு
விலக்கு கொடுத்தவள்.

என்னிடத்தில்
உள்ள உனக்கான
பாத்திரமும்.

நமக்குள்
நீ ஏற்படுத்திய
இட்டுநிரப்பமுடியாத
இடைவெளியும்
வெற்றிடமாகவே
காத்திருக்கும்.

No comments:

Post a Comment