எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Thursday, March 18, 2010

பேறு


உறவில்லாத
தனிமை.

உன்னிடத்தில்
மறுக்கபட்ட-எனது
உரிமை.

சாவிற்கு
பின் வரும்
அமைதி.

இறந்து
பிரசுவித்த
சிசு.

சுடுகாட்டு
சாம்பல்.

சித்திரைச்
சூரியன்.

நித்திரை
பொசுக்கும்
நிலா.

அடியில்லாத
செருப்பு.

விடிவில்லாத
இரவு.

உதடு
வெடித்த
புன்செய்.

குருதி
வழிந்த
புத்தன் சிலை.

முள்ளோடிந்த
கடிகாரம்.

முடிவில்லாத
வாழ்க்கை.

எனக்கு கிடைத்தவைகள்.

No comments:

Post a Comment