எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Tuesday, March 2, 2010

விடை தேடி


எங்கோ
விழுந்த மழைத்துளி
என் உயிர்
நனைத்தது
ஏன்?

எங்கோ
உறைந்த
பனிக்கட்டியால்
என்இதயம்
உறைந்தது ஏன்?

நீல வானிலிருந்து
சிந்தும்
நீர் துளிகள்
சேமித்து-மீண்டும்
வானுக்கே வழியனுப்ப
முயற்சிக்கேறேன்!

உலகம்
என்னை
மட்டும்
வேறுபடுத்திப்
பார்க்கிறதா-இல்லை
நான் வேறுபடிருக்கேறேனா?

இது
உன் விழியால்
வந்த வினை-உன்
விழிகளில்
மட்டுமே
விடையும்!

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment