பேதமெல்லாம்
கடந்து
நண்பராய்
இணைவோம்-நாம்
மனிதநேயமுள்ள
மாந்தராய்
மலர்வோம்.
சாதி மதம்
அடித்து நொறுக்க
சாட்டை சுழற்றுவோம்
வர்க்க பேதம்
மண்ணில் புதைக்க
கொடு வாளேந்துவோம்
சமதர்ம
சமத்துவம் செய்திட
புதுத் தளம்
செய்துவோம்-நாம்
களம் காணுவோம்
நாகரிக
வார்த்தைகளால்-சமூகக்
கோபம் பதிவு செய்.
உன்
அழகு தமிழ்
கவிதைகளால்-அரங்கம்
அழகு செய்.
சுவை
மிகு நகைத்
திறனை-சுவைக்க
மற்றவர்க்குக்
கொடு.
பார்
மாந்தர்
மடமை நீக்க
பகுத்தறிவுப்
பாதை எடு.
நீ
மடமைக்கோர்
பாடை எடு.
பொதுவுடைமை
சமதர்மம்
இதுவே நம்
பாதையாகும்
அதை
அமைப்பதற்கும்.
அதற்காய்
உழைப்பதற்கும்
இதுவே காலமாகும்.
கடந்து
நண்பராய்
இணைவோம்-நாம்
மனிதநேயமுள்ள
மாந்தராய்
மலர்வோம்.
சாதி மதம்
அடித்து நொறுக்க
சாட்டை சுழற்றுவோம்
வர்க்க பேதம்
மண்ணில் புதைக்க
கொடு வாளேந்துவோம்
சமதர்ம
சமத்துவம் செய்திட
புதுத் தளம்
செய்துவோம்-நாம்
களம் காணுவோம்
நாகரிக
வார்த்தைகளால்-சமூகக்
கோபம் பதிவு செய்.
உன்
அழகு தமிழ்
கவிதைகளால்-அரங்கம்
அழகு செய்.
சுவை
மிகு நகைத்
திறனை-சுவைக்க
மற்றவர்க்குக்
கொடு.
பார்
மாந்தர்
மடமை நீக்க
பகுத்தறிவுப்
பாதை எடு.
நீ
மடமைக்கோர்
பாடை எடு.
பொதுவுடைமை
சமதர்மம்
இதுவே நம்
பாதையாகும்
அதை
அமைப்பதற்கும்.
அதற்காய்
உழைப்பதற்கும்
இதுவே காலமாகும்.
//பார்
ReplyDeleteமாந்தர்
மடமை நீக்க
பகுத்தறிவுப்
பாதை எடு//
நல்ல வரிகள்.
தோழறது பாராட்டுக்களுக்கும் தொடர்ச்சியானா உங்களது கவனிப்புகளுக்கும் நன்றிகள்
ReplyDeleteஉங்களது பாப்பா பாட்டுக்களும் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்