எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Sunday, February 21, 2010

ஒரு மெழுகுவர்த்தியின் தற்கொலை(சுனாமியின் போது எழுதப்பட்ட கவிதை)


ஆழி சுழ்
நாழி அறியா வன்னம்-உயிர்
போகும் நாள்
தெரியாது செய்து-அவர் தம்
யாக்கை தன்னை-நின் நீர்
நாக்கை கொண்டு
உள்வாங்கி
உயிர் உறிஞ்சி-நீ
துப்பிய
சடலச் சளிகள் எத்துனை? எத்துனை?

நின்
நடு கொண்ட்டேழுப்பிய
வெப்பம் தனிக்க-புவி
வாழ் உயிர் கொண்டனைத்தது
முறையோ?சரியோ?

போதும்!போதும்!

உன்னை கடல்அன்னை
என்றழைக்க
"நா"மறுக்கிறது!

கொடுத்த முத்துக்களின்
எண்ணிக்கையை உயிர்கொண்டோப்பிட்டு
திரும்பப் பெறுவாய்-என்றறிந்திருந்தால்
முத்துக்களை-உன்
முகத்தில் விசியிருப்போம்!

நீ அளித்த
புலாலை-ருசித்த
"நா" வை-செரித்த
இரைப்பையை கிழிப்பாய்
என அறிந்திருந்தால்-அதனை
திரும்பத்
துப்பியிருப்போம்!

மானுடம் செய்தவறு
பொறுக்க முடியா
அவர் வாழ்
நிலவுலகில்
நீலச்சாயம் பூச முற்ப்பட்டயோ?

மன்னிக்கத் முடியாத
நீ
அன்னை அன்று
அரக்கனே!

நீ
என் மேலேறியும்-சுடர்க்
கொண்டாய் அளவாய் இருந்தால்-உன்னை
எரித்துப் போசுக்கியிருப்பேன்!

எடுத்துக் கூற-இம்
முட்டாளுக்கு
ஆளில்லை!

ஓடி வந்து நானுனை
நோக்கிய நொடி
உண்மையரிந்தேன்!

என்
எண்ணங்கள் பொய்த்ததனால்-நான்
என்னையே எரித்துக்கொள்கிறேன்!

என்னை
உர்க்கியழும் ஒளி
இறந்தவர் ஆன்மாக்களுக்கு
அமைதி தரட்டும்!

பரவும் மஞ்சள்
கதிர்-முன்
படர்ந்த இருளை-தூர
விரட்டடும்!

ஒழுகு-என்
உடல் கண்டு-அவர் தம்
பிரிந்தவர் உற்றார்கள்
அமைதி பெறட்டும்!

உன்னை
பொசுக்க துடித்து
எரிந்து கருகும்-என்
நா-நீ
சாம்பலாக சபிக்கட்டும்!

நீ
சாம்பலாக சபிக்கட்டும்!

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment