எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Monday, February 22, 2010

கடந்து வந்தப் பாதை


காணல் நீர்
நிறைந்தது-என்
தேசம்-அதில்
கந்தகக் காற்று
மட்டுமே என்
சுவாசம்!

கோர நாகங்களின்
பிறப்பிடம்-எம்
பாதை!

செல்லும் வழி
மறைக்கும் இருட்டு
நிறைந்தது என்
சாலை!

தூரோகங்களின்
வழிப்பறிகளை
தாண்டிச் செல்கையில்;
தோல்விகளின்
இடியிறக்கம் எம்
தலையில் விழும்!

கள்ளிகள்
மட்டுமே
கருத்தரிக்கும்-என்
தேசத்தில் மகரந்த
வாடை இல்லை!

என்
வெற்றிக்கான வேள்வியின்
போதேல்லாம்
கந்தகச் சுறாவளி
துயிலெழுந்து பெருமுச்சு விடும்!

தீ
அணைந்தாலும்
கங்குகள் நீர்துப்போவதில்லை!

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment