எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Wednesday, February 24, 2010

ஓ பண்பாடு காப்பர்களே!!




ஓ பண்பாடு காப்பர்களே!!
பாப்பாபட்டியிலும்,கிரிப்பட்டியிலும்
உங்கள் பண்பாடு பாடையில்
இருப்பதை என் மறந்து போனிர்கள்?

மாறுபட்ட கருத்தினை
பெண்ணொருத்தி கூறினாள் என்பதினால்
பெண்ணினத்தை கேவலப்படுத்தினாள் என்று
கூறும் உன் தமிழ்த் திருநாட்டில் வேசிகள் இல்லையா?

இதே கருத்தை வார்த்தைகளால்
மட்டுமே வேறுபடுத்திக் கூறிய பெரியாரை
திராவிடத் தலைவராக ஏற்றுக் கொண்டதேன்?

பெண்ணும் ஆணும் சேர்ந்துவாழ
திருமணமே தேவை இல்லை என்றுரைத்த
பெரியார் முட்டாளா?

வசைபாடும் தலைவர்களில்
வைப்பாட்டி வைத்துக் கொள்ளாதவர்கள்
எத்துனை பேர்?

உன் தமிழ் மொழியின்
சிலப்பாய் கூறப்படும்
காவியத்தில்
மாதவிக் கென்ன
மகாத்மா பாத்திரமா?

"ஆணுறை பயன்படுத்து" என்று
ஒரு பெண் கூறியது
ஒழுக்கக் கேடெனில்
இத்துணை ஆண்டு காலமாக
அரசு இயந்திரம் இதே விளம்பரத்திற்கு
பலகோடி செலவு செய்ததே;செய்கிறதே-அப்போதேல்லாம்
எங்கே போனது திராவிடனின் கலாச்சாரப் பற்று?
தமிழச்சிகளின் கற்புக் கவசம்?

சானியாமிர்சாவின் கால்சட்டையினாலும்
குஷ்புவின் வார்த்தையாலும்-உன்
வேலி தாண்டும் கலாச்சாரம் அழிகிரதேனில் அது
அழிவதில் தவறில்லை.

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment