என் நெஞ்சு நிறைய
நம்பிக்கை சுமக்கிறேன்!
வாழ் பயண
வழிச் செலவுக்கு
அனுபவம் சேமிக்கிறேன்!
இடர் செய்யும்
கற்களையெல்லாம் ஏணிப்படிகளாய்
மாற்றியபடி!
என் காலிடுக்கில்
வழியும் உதிரத்துளிகளை
என் வேர்வையால்
கழுவிக் கொள்கிறேன்!
இத் தளிர்
இதுவரைப் பூக்களை
சுமந்ததே இல்லை!
சாம்பலின்
நிறமறிந்த அளவு
சாமந்தியின் வாசம்
தெரியாது!
பினம் தின்னும்
கழுகுகள் நிறைந்த
விதியில் என் மன
ஊர்வலம் போகிறது!
இந்தகல் தானாய்
உருண்டு-உருண்டே
சிற்பமாகிறது!
சேதாரங்கள் தான்
என்னை செதுக்குகின்றன
வாழ்க்கையிலும்!
அரிவாள்-சுத்தியல்
No comments:
Post a Comment