எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Sunday, February 21, 2010

கனவு


என்
அந்தபுறச் சோலையிலே
அயர்ந்து
நான் படுத்திருந்தேன் !

கண்ணயர்ந்த
வேளையிலே
கட்டழகுப் பெண்ணொருத்தி-எனை
கட்டிலோடு
அள்ளிக்கொண்டாள்!

கட்டி எனைத் தந்த
முத்தங்கள் எல்லாம்
வெட்டி பரிசளித்த
பொன் கட்டிகள்!

சுட்டு விரலசைவில்
சொர்க்கம் திறந்தாள்!
பட்டு அவள் தம்
மேனியழகு அதில்
பஞ்சம் இல்லை!

செந்தாழம் பூவான
செவ்விதழில்-கலசக்
கள் வண்டானேன்!

அங்கக்

குறிப்பெடுத்தேன்
தங்கம் அவள்மேனி!
இடமில்லை

இனிமேலும்!

மோகம்

முற்றியதால்-அவள்
முகம் காண

மறந்துவிட்டேன்!

விழித்து நான்
பார்த்தபோது

சிறகடித்து
பறந்திருந்தாள்!

சிறகால் அவள் செய்தகாயம்
சிக்கிரம் ஆறிடுமோ?
வருவாள் என்று
நானும்-என்
வாசலில் பூத்து கிடவேன்!

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment